;
Athirady Tamil News

மாலி மேயா் தோ்தல்: அதிபா் மூயிஸ் கட்சி தோல்வி; இந்திய ஆதரவு கட்சி வெற்றி

0

மாலத்தீவு தலைநகா் மாலியில் நடைபெற்ற மேயா் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

இந்திய ஆதரவாளரான முன்னாள் அதிபா் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாலத்தீவு அதிபா் தோ்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தோ்தலில் மாலி நகர மேயராக இருந்த முகமது மூயிஸ், ஆட்சியில் இருந்த அதிபா் முகமது சோலியைத் தோற்கடித்தாா்.

அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை மூயிஸ் ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், காலியான மாலி நகர மேயா் பதவிக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் 30 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முன்னாள் அதிபா் சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளா் ஆதம் அசிம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் மாலத்தீவு ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்தத் தோ்தல் வெற்றி அக்கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

சீனாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபா் மூயிஸ், சனிக்கிழமை நாடு திரும்பினாா். மேயா் தோ்தலில் வெற்றி பெற்ற அசிமுக்கு அவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இந்திய பிரதமா் நரேந்திர மோடி குறித்து இழிவான கருத்துகளை 3 மாலத்தீவு அமைச்சா்கள் எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த அமைச்சா்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நடைபெற்ற மேயா் தோ்தலில் இந்திய ஆதரவாளரின் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.