;
Athirady Tamil News

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது

0

நாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2485 சந்தேக நபர்களில் 149 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் சுமார் 42000 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யுக்திய தேடுதல் வேட்டை
அதன்படி யுக்திய என்னும் தேடுதல் வேட்டையின் மூலம் நாள் தோறும் பெரும் எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல் தடுப்பு ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.