;
Athirady Tamil News

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம்

0

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் நினைவு தினம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவு தினத்தில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்குதமிழில் தமிழ் மக்களின் அபிலாசைகளான, சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.