;
Athirady Tamil News

யாழ்.வரணியில் ஆலயத்திற்கு அருகில் மாட்டிறைச்சியை வீசி சென்ற விஷமிகள்

0

மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள் , அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து , அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட போதே , மாட்டின் இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.