;
Athirady Tamil News

தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது

0

3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.1.2024) எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மதிய உணவுப் பொட்டலம்

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தை மாஹோ பொலிஸார் நேற்று (18.1.2024) சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ஓட்டுநரின் மதிய உணவுப் பொட்டலம் எனக் கூறும் சிறிய சந்தேகத்திற்கிடமான பொதி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பொதியை ஆய்வு செய்த பொலிஸார் அதில் இருந்து 143 கிராம் ஹெராயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் 43 வயதான ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.