;
Athirady Tamil News

அயோத்தி ராமர் கோவில் கட்ட எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது தெரியுமா? முழு விவரம்..

0

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் திகதி நடைபெறுகிறது.

மூன்று கட்டங்களாக ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், முதல் கட்ட பணிகள் முடிந்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பணிகள் அனைத்தும் டிசம்பர் 2025க்குள் முடிக்கப்படும்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ஏழாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை கோடி ரூபாய் செலவு?

ராமர் கோயில் கட்டுவதற்கான மொத்தச் செலவு சுமார் ரூ.1,800 கோடி என கூறப்படுகிறது. இது சமீப காலங்களில் மிகவும் விலையுயர்ந்த கட்டமைப்பு ஆகும்.

குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை (Statue Of Unity) ரூ.2,989 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.836 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

அந்தவகையில், அயோத்தி ராமர் கோவில் இந்தியாவில் இரண்டாவது மிக விலையுயர்ந்த கட்டிடம் ஆகும்.

அதேநேரம் இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் முதலிடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

அயோத்தியில் இம்மாதம் 22ம் திகதி ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. சரயு நதிக்கரையில் மிகவும் லட்சியமாக கட்டப்பட்ட ராமர் கோயில், உலகின் மூன்றாவது பாரிய இந்துக் கோயிலாகும்.

இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் உருவகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்போது இக்கோயிலின் பெருமை நாடு முழுவதும் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. இந்த ராமர் கோவில் மிகவும் விலையுயர்ந்த மத கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும்.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் Larsen & Toubro மற்றும் Tata Consulting Engineers நிறுவனங்களால் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.

கோவில் வளாகம் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான கோயில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 161 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மூன்று தளங்கள் மற்றும் 12 வாயில்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

நன்கொடைகள்
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுவதற்காக சுமார் 3,500 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலித்துள்ளது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் ரூ.11 லட்சமும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சமும் வழங்கினர். இதுவரை சேகரிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 52 சதவீதம் கோயில் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

மீதி பணத்தை அறக்கட்டளை மூலம் வரும் காலங்களில் கோயில் பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கோயிலைத் தவிர, இந்த நன்கொடைகளில் ஒரு பகுதி அயோத்தியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.