;
Athirady Tamil News

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

0

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பெற்றோரிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், மத விழாக்கள் மற்றும் சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால், தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான சுற்றறிக்கை
இதன்படி, முதலாம் தவணையில் மூன்று விழாக்கள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் நான்கு விழாக்கள் என ஆண்டு முழுவதும் 07 விழாக்களை மாத்திரம் நடத்த அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகள், ஆசிரியர் அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து அதிபர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வரம்பில்லாமல் பணம் வசூலிப்பதாக பெற்றோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.