;
Athirady Tamil News

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

நிகழ் நிலை காப்பு சட்டமூலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.