;
Athirady Tamil News

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

0

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை(30) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கணக்காளர் ஐ.எல் பாரீஸ் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,திணைக்களங்களின் பிரதிநிதிகள்,மஜ்லிஸ் சூறா பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேச காணிப் பிரச்சினைகள்,மையவாடி மற்றும் பாடசாலைகளுக்கு காணி விடுவிப்பு விடயங்கள்,நீர்பாசனம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்கான தீர்வுகளும் ,விவசாயம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்காம தீர்வுகளும்,நகரமயமான கிராமங்களின் அபிவிருத்தி விடயங்கள் போன்றவர்கள் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.