;
Athirady Tamil News

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்

0

ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி,நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாணின் நிலையான எடை
இதற்கமைய ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விற்பனை செய்யப்படும் பாணின் எடையை காட்சிபடுத்தப்படுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.