;
Athirady Tamil News

இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

0

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.