;
Athirady Tamil News

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0

நாட்டில் நாளை (04) கரையோர மார்க்கத்தில் இயங்கும் தொடருந்துகள் சில பிரதான தொடருந்து நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுச் செயலாளர் தொடருந்து நிலையம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களில் அதிகாலை 05.00 மணி முதல் காலை 09.00 மணி வரை தொடருந்துகள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர தின விழா
76ஆவது தேசிய சுதந்திர தின விழாவை, நாளை கொழும்பு காலி முகத்திடலில் அதிபர், பிரதமர் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் வெகு விமர்சையாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர விழாவில் பங்கேற்கும் முக்கியஸ்தர்கள், அணிவகுப்பில் பங்கேற்கும் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடருந்துகள் இவ்வாறு நிறுத்தப்படாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் 76வது சுதந்திர தின விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.