;
Athirady Tamil News

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று

0

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன.

இன்றைய நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் டின்ஸ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினர்
இதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி 76வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் கலந்து கொள்ளவுள்ளார்.

அவர் தலைமையிலான குழுவினர் நேற்று நாட்டிற்கு விஜயம் செய்தனர்.

அதேவேளை, தற்போதைய அபிவிருத்திப் பாதை உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கும், சுபீட்சத்தை மீட்டெடுப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்து
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், அது நிதி ரீதியாக திவாலான நாடாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி திறம்பட வழிநடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விரிவான, நீண்டகால தேசிய புனரமைப்பு திட்டத்திற்கு ஏற்ப, கஷ்டங்களை தாங்கிய குடிமக்களின் உறுதியான ஆதரவின் காரணமாக சாதனைகள் படிப்படியாக உணரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயணம் முழுவதும், சவால்கள் படிப்படியாக மறைந்துவிடும், வாழ்க்கைச் சுமைகள் குறையும், பொருளாதாரம் வலுவடைந்து இலங்கை புத்துயிர் பெறும் என விக்ரமசிங்க தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினேஷ் குணவர்தனவின் சுதந்திர தின செய்தி
இதேவேளை, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாடு மெல்ல மீண்டு வருகிறது இந்த ஆண்டு சுதந்திர தினம் நாடு திரும்பும் போது கொண்டாடப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாடு அந்தக் கடினமான தடைகளைத் தாண்டியுள்ளதாக அவர் தனது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச சுதந்திர தினச் செய்தி
இதேவேளை, சுதந்திர தினத்தில் மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதியளிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் சுதந்திரத்திற்கு வேலி போடும் திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்திருப்பது வருந்தத்தக்கது.

சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு முழு குடிமக்களின் பொறுப்பாகும். அதனைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.