;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடிகள்

0

இலங்கையின் 76ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்றன.

இந்தநிலையில், தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கறுப்புக்கொடிகள்
அந்தவகையில், குறித்த போராட்டத்திற்கு தெரிவிக்கும் முகமாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று யாழ். பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, இன்றையதினம் மாபெரும் கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.