;
Athirady Tamil News

நெடுந்தீவில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 23 தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், காங்கேசன்துறை கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு, விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.