;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

0

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 03ம் திகதி 23 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் 2 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

மீனவர்கள் நேற்று(04) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

பின்னர் 23 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக யாழ்.மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.