;
Athirady Tamil News

மறக்க முடியாத யாழ் இசை நிகழ்ச்சிக்கு நன்றி: ஹரிஹரன் உருக்கம்

0

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பாக நன்றி தெரிவித்து பாடகர் ஹரிஹரன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.

உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்த உதவிய யாழ்ப்பாண இசை நிகழ்ச்சிக்கு பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் கொண்டாடினோம். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்த கலா மாஸ்டருக்கும் மற்றும் இந்திரகுமார் பத்மநாதனுக்கும் சிறப்பு நன்றி என தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சி பெரும் குழப்பத்தில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.