;
Athirady Tamil News

கனடாவில் கோர விபத்து: மூன்று இந்தியர்கள் ஸ்தலத்திலேயே பலி

0

கனடாவில் ஏற்பட்ட கோர விபத்தொன்றில் இரு சகோதரர்கள் உட்பட மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஸ்தலத்திலேயே பலி
கடந்த வியாழக்கிழமை இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன, அவற்றில் ஒன்றில் ரீத்திக் (Reetik Chhabra, 23), அவரது தம்பியான ரோஹன் (Rohan Chhabra, 22) மற்றும் அவர்களுடைய நண்பரான கௌரவ் (Gaurav Fasge, 24) ஆகியோர் பயணித்துள்ளனர்.

அதன்போது, அவர்கள் பயணித்த கார் மின் கம்பம் ஒன்றில் மோதியதில் , காருக்குள் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சாரதி கைது
அதேவேளை, சம்பவ இடத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான நிலையில் மற்றுமொரு கார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில், அவர்களும், மற்றொரு காரில் பயணித்த சிலரும், கார் பந்தயத்தில் ஈடுப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.