;
Athirady Tamil News

அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் வெடித்த கண்ணிவெடி: 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!

0

ஏமனில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் – தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.

கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.