;
Athirady Tamil News

யாழ். ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் வி.காசிப்பிள்ளையின் சிலை திறப்பு விழா

0

யாழ்ப்பாணம் – அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.

வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் சு.மோகனதாஸ் திறந்து வைத்த குறித்த சிலையின் திறப்பு விழா நேற்றைய தினம் (14.02.2024) நடைபெற்றுள்ளது.

அதேவேளை, குறித்த சிலையினை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரன் றசாந்தன் எனும் இளம் சிற்பி தத்துரூபமான முறையில் வடிவமைத்துள்ளார்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
அத்துடன், இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் வலய கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.