;
Athirady Tamil News

வலயக்கல்வி பணிப்பாளரை நியமிக்குக

0

தென்மராட்சிக் கல்வி வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததால் வருட ஆரம்பத்தில் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதில் தென்மராட்சிக் கல்வி வலயத்தினர் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

தென்மராட்சியிலுள்ள 59 பாட சாலைகளுக்கும் ஒரு கல்வி வலயமும் ஒரு கோட்டக் கல்வி அலுவலகமும் மட்டுமே உள்ளன. கடந்த வருடம் மார்கழி மாதம் வரை கடமையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வில் சென்ற பின்னர் இதுவரை வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.