;
Athirady Tamil News

கனேடிய அரசின் செயலால் அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்

0

கனடாவில் வீட்டில் குடும்பமொன்று வசித்தபோதிலும் அங்கு யாருமில்லை என தெரிவித்து அரசாங்கம் வரி விதித்துள்ளமையால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும் சார்லட் பக்கீரா தம்பதியினருக்கே இவ்வாறு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் வசிக்காவிட்டால் வரி
வீடுகளில் வசிக்காமல் அவற்றை வெறுமனே வைத்திருப்பவர்களுக்கு மாகாணத்தில் வரி அறவீட்டு முறை காணப்படுகின்றது.வேகன்சி வரி என இந்த வரிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்பவர்களிடமிருந்து இந்த வரி அறவீடு செய்யப்படுகின்றது.

வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லேடிஸ்மித் பகுதியில் இவர்களது வீடு அமைந்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக 13,000 டொலர்களை செலுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதியினர் குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளனர். வீட்டிற்கு வரி செலுத்த போதியளவு பணமில்லாத காரணத்தினால் வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.