;
Athirady Tamil News

யாழ்.சிறையில் இருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்

0

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 3 இந்திய கடற்றொழிலாளர்களும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக இரு படகோட்டிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இடமாற்றம்
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்ற அடிப்படையில் இந்த 3 கைதிகளும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.