;
Athirady Tamil News

அமெரிக்காவில் பிளாஸ்ட்டிக் ஸ்பூன் வைத்திருந்தவர் சுட்டுக் கொலை

0

அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு கிடங்கில் புகுந்த நபர், குடிபோதையில் கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்றபோது, ஜேசன் லீ மக்கானி என்ற அந்த நபர் சாவகாசமாக பொலிசாரை நோக்கி வந்தார்.

அவரை கைகளை உயர்த்தும்படி எச்சரித்த போது, முதலில் பயந்ததுபோல் நடித்து பின்னர் காவல்துறையினரை தாக்க முயற்சித்தார். இதனால் பொலிசார் அவரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.