தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த பட்டா வாகனம் சாவகச்சேரியில் விபத்து!
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-23-071159-750x430.jpg)
தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த “பட்டா வாகனம்” ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.
சாவகச்சேரியிலிருந்து தென்னம் பொச்சுக்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.