;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் மாவையின் கருத்து

0

தமிழரசுகக் கட்சிக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ளவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றையதினம்(23.02.2024) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சியானது நீதிமன்றத்திற்கு பதிலளிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனை ஒற்றுமையாக எதிர்கொண்டு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையிலான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

மேலும் கட்சியின் சிரேஷ்ட வழக்கறிஞ்சர்களுடன் கலந்துரையாடி இந்த வழக்கு தொடர்பில் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள மற்றும் நீதிமன்றினை அணுகுதல் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.