;
Athirady Tamil News

அரசாங்க வருமானத்தில் கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் இலங்கை

0

உலக வங்கியின் அபிவிருத்தி குறிகாட்டிகளின் பிரகாரம் அரசாங்க வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்க வருவாயில் இருந்து கடனுக்கு 33 சதவீத வட்டியை செலுத்தியுள்ளதுடன், அந்த ஆண்டில் கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2010 இல், கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்ததுடன், அந்த ஆண்டில் செலுத்தப்படும் வட்டியானது வருவாயில் நாற்பத்தி இரண்டு சதவீதம் ஆகும்.

உலகில் கடன்களுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடு
2020 ஆம் ஆண்டு உலகில் கடன்களுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதுடன், அந்த ஆண்டின் வருவாயில் இருந்து வட்டிக்கு செலவிடப்பட்ட தொகை 71 சதவீதம் ஆகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க வருமானத்தில் 77 வீதத்தை வட்டிக்காக செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில், பொது வருவாயிலிருந்து கடனுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் லெபனான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதாகவும் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.