;
Athirady Tamil News

பாடசாலை ஒன்றில் களவுபோன 13 கணினிகள்!

0

பேருவளை பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கணனிகள் திருடப்பட்டமை தொடர்பில் அதிபர் , பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரிய அரசாங்கம் வழங்கிய கணனிகள்
நீண்ட வார விடுமுறைக்காகப் பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கூட்டமொன்றிற்காகப் பாடசாலை உதவியாளரால் பாடசாலை திறக்கப்பட்டுள்ளது .

இதன்போது ஆசிரியர் ஓய்வறை கதவு திறந்து கிடப்பதைக் கண்ட உதவியாளர் உள்ளே சென்று பாரத்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பாடசாலை உதவியாளர் அதிபருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கொரிய அரசாங்கத்திடம் இருந்து இந்த கணினிகள் உதவியாகப் பெறப்பட்டதாகவும், ஒவ்வொரு கணினியின் மொத்த பெறுமதி 60,000 ரூபா எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.