;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையில் கனடா பிரஜை உயிரிழப்பு

0

மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில்யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கனடா பிரஜை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.