;
Athirady Tamil News

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் விஜயம்

0

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் பகுதிகளுக்கு களவிஜயமொன்றை நேற்று(27) மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிலுவையில் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையினை தொடர்ந்து குறித்த களவிஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இத்தாவில் வெட்டுக்காடு, மற்றும் புதுக்காடு கரந்தாய் பகுதிகளில் உள்ள LRC காணிகளை பார்வையிட்டதுடன், உரிய ஆவணங்களை வழங்குவது தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

குறித்த களவிஜயத்தில் காணி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் HMPP ஹேரத், ஜனாதிபதி செயலக பிரதிநிதி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (LRC),பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.