;
Athirady Tamil News

இந்தியாவில் இருந்து வந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் கலந்துகொள்ளும் குழு

0

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அந்தவகையில் யாழ்ப்பாண இந்தியத் தூதுவர்
ஸ்ரீ சாய் முரளி அவர்களை சந்தித்தனர்.

அழகான இலங்கை தீவு முழுவதும் அவர்களின் சைக்கிள் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண இந்தியத்தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்கள் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இவர்கள் உலகநாடுகளுக்கு சென்று துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கை முழுவதும் துவிச்சக்கர வண்டி பயணத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.