;
Athirady Tamil News

வைக்கோலுக்குத் தீ வைத்தவர் கைது- தமிழைத் தவறாக எழுதியதால் வசமாகச் சிக்கிய ‘காமெடி’ சம்பவம்!

0

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நெய்குன்னத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்கு சொந்தமான நிலத்தில் வைத்திருந்த வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் தீ வைத்தார். மேலும் அவரது வீட்டின் சுவரில் ‘தெடரும்’ என பிழையாக எழுதி, அதனைத் திருத்தி தொடரும் எனவும் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் யாரும் குற்றத்தில் ஈடுபடவில்லை என மறுத்தனர். அதனால் நூதன முறையை கையாண்டனர் காவல்துறையினர். அந்த வகையில் 10 பேரிடமும் தனித்தனியாக பேப்பர், பேனாவை வழங்கி, ‘தொடரும்’ என வரும் சில வாக்கியங்களை எழுதிக் காட்டும்படி தேர்வு வைத்தார்.

அப்போது ஜெயபிரகாஷ் என்ற நபர் ‘தெடரும்’ என பிழையாக எழுதியதால் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். தீ பற்றி எரிந்தால் தங்கள் ஊர் பற்றிய செய்தி பெரியதாக பேசப்படும் எனவும், ஊருக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரையும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும், ‘தெடரும்’ பிழையை தொடரும் என சரிப்படுத்தி எழுதிய பிரகாஷ் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.