;
Athirady Tamil News

லீப் நாளில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள்

0

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றுமுன் தினம் பிறந்துள்ளன.

குயின்ஸ்வெ ஹெல்த் சென்டர் மற்றும் ட்ரில்லியம் ஹெலத் பார்ட்னர்ஸ் மருத்துவமனைகளில் இவ்வாறு சிசுக்கள் பிறந்துள்ளன.

லீப் நாளில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, பெப்ரவரி மாதம் 29ம் திகதி பிறந்தநாளை கொண்டாடும் நபர்களுக்கான விசேட கொண்டாட்ட நிகழ்வு ஒன்று ரொறன்ரோவில் நடைபெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.