;
Athirady Tamil News

கட்சிக்கு நீதி கோரி போராடுகிறார்கள்

0

இலங்கையில் நீதி செத்து விட்டது என போராட்டம் நடத்தியவர்கள், இன்று தமது உட்கட்சி பிரச்சனைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில்,

இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள். இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்து விட்டதென்று மனிதச்சங்கிலிப்போராட்டம் நடத்தியவர்கள், எல்லாப்பிரச்சினைக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள், தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்திக்கும் போவோம் என்பார்கள்,தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடு இலங்கை நீதி மன்றத்தை நாடியுள்ளனர்.

இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டது” என மேலும் குறிப்படப்பட்டு இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.