;
Athirady Tamil News

யாழ். கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பம்

0

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள், பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர் போராட்டங்கள்

இலங்கைக் கடல் எல்லையில் இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி அறிவித்திருந்தன.

அதனடிப்படையில் தீர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையே முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழிலாளர்களின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நெடுந்தீவு மற்றும் சுழிபுரம் பகுதிகளிலும் கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.