;
Athirady Tamil News

தனியார் அரபு பெண்கள் பாடசாலையொன்றில் தீ விபத்து

0

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்று தீப்பரவலக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவமானது (03) இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்த காவல்துறையினர் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பரவலான தீ
அத்தோடு, அஅப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் பரவலான தீயினால் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.