;
Athirady Tamil News

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம்

0

ஜெர்மனியில் முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜெர்மனி – மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த காப்பகத்தில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பில் அறிந்தத பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.