;
Athirady Tamil News

முதியோர் காப்பகத்தில் பாரிய தீ விபத்து!

0

ஜெர்மனி – மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக விசாரணை
இந்நிலையில் விபத்து தொடர்பில் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.