;
Athirady Tamil News

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர் விபரம் வெளியானது

0

கடந்த 2023 ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 476 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் தகவல் அதிகாரி ஜி.ஜி. வீரசேகர வழங்கிய தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு வெளிநாட்டில் பணிபுரியும் போது
2023ஆம் ஆண்டு வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 476 தொழிலாளர்களில் 366 பேர் இயற்கை மரணம் மற்றும் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 34 பேர் சாலை விபத்துகளாலும், 27 தொழிலாளர்கள் மற்ற விபத்துகளாலும் உயிரிழந்துள்ளனர்.

10 பேர் கொலைகள் மற்றும் மூன்று பேர் வேறு காரணங்களால்
இது தவிர, 10 பேர் கொலைகள் மற்றும் மூன்று பேர் வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

2022-ல் 304 பேரும், 2021-ல் 295 பேரும், 2020-ல் 173 பேரும், 2019-ல் 224 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.