;
Athirady Tamil News

திடீரென மயங்கி விழுந்த இரு பெண்கள் உயிரிழப்பு

0

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(06) இடம்பெற்றுள்ளது.

அதன்படி கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் இன்று(06) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி உயிரிழப்பு
கலவான பிரதேசத்தை சேர்ந்த 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இமல்கா சட்சராணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளதாக மஹரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விரிவுரையாளர் உயிரிழப்பு
எதிரிசூரிய ஆராச்சி பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைக்காக மஹரகம நகருக்கு அருகில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்த சமயமே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.