;
Athirady Tamil News

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்றையதினம் பல பகுதிகளில் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் எதிர்நோக்கக் கூடிய பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.