;
Athirady Tamil News

மேகாலயா: ஷில்லாங்கில் பேருந்து நிறுத்தம் அருகே குண்டுவெடிப்பு -ஒருவர் காயம்!

0

வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குடியிருப்புப் பகுதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஷில்லாங் நகர மௌலாங்காட் பகுதியில், ஹரிஜன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.அதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.