;
Athirady Tamil News

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது

0

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, யாழை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நல்லூர் பகுதியில் மூவருக்குச் சொந்தமான காணியை ஒருவர் மரணித்து விட்ட நிலையில் மற்றைய நபர் வெளிநாட்டில் வசித்து வந்திருப்பதுடன் அவருக்குத் தெரியாமல் மூன்றாவது நபர் தனது பெயருக்குக்கு உரிம மாற்றம் செய்துள்ளார்.

பெண் கைது
இதை அறிந்து கொண்ட நபர் , தனக்குத் தெரியாமல் தனது காணியை உரிம மாற்றம் செய்து மற்றைய நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோசடியான முறையில் காணி உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.