;
Athirady Tamil News

வெடுக்குநாறிமலையில் கைதான எட்டு பேர் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

0

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று(10) அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதாவது வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட எட்டு பேர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நேற்று 09 முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நீதவான்
இந்நிலையில் குறித்த சம்பவ தினத்தன்று அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமையால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த எட்டு பேரையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி உத்தரவின் அடிப்படையில் குறித்த எட்டு பேரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இன்றையதினம் (10) வவுனியா சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.