;
Athirady Tamil News

தமிழர் உட்பட 10 பேர்களின் புகைப்படம் வெளியிட்டு பெண்களை எச்சரித்த லண்டன் பொலிசார்

0

லண்டன் பொலிசார் தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர்.

முகங்களை நினைவில் வைத்திருந்து
குறித்த 10 பேர்களும் டேட்டிங் செயலிகளில் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும், அவர்களை கட்டாயம் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த நபர்களின் முகங்களை நினைவில் வைத்திருந்து பாதுகாப்பாக இருக்கவும் கோரியுள்ளனர். Kevarnie Queen என்பவர் 22 துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

Ilford பகுதியை சேர்ந்த 41 வயது சமீர் பட்டேல் 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார். Stanwell பகுதியை சேர்ந்த 32 வாயது ரதீசன் ரங்கநாதன் பல்வேறு துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

லண்டன் பொலிசார்
Forest Gate பகுதியை சேர்ந்த 39 வயது அஷ்ரப் கான் என்பவர் 13 வயது சிறுமியை சீரழித்த வழக்கில் பொலிசாரிடம் சிக்கியவர். இவர் மீது இரண்டு வன்கொடுமை வழக்கு மற்றும் ஒரு துஸ்பிரயோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Richmond பகுதியை சேர்ந்த 21 வயது David Berbers சமூக ஊடகத்தில் அறிமுகமான இளம் வயது சிறுமி ஒருவரை சீரழித்துள்ளார். 31 வயதான அமீர் முகமது, Anthony Ekpenyong, 37 வயதான ரியான் ஜான்ஸ்டன்,

தெற்கு க்ராய்டன் பகுதியை சேர்ந்த 47 வயது Clint Osbourne மற்றும் 29 வயதான Jamie Maggioni ஆகியோர்களின் புகைப்படங்களையே லண்டன் பொலிசார் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.