;
Athirady Tamil News

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரின் அராஜகம்; யாழில் ஆர்ப்பாட்டம்

0

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸ் அராஜகத்தை கண்டித்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று (11) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீதான பொலிஸாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்படிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.