;
Athirady Tamil News

திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 6 பேர் பலி

0

மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) திருமண விழாவில் கலந்துகொள்ள சீர்வரிசையுடன் ஊர்வலமாக நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் பங்கேற்றவர்கள் விபத்தில் பலியாகியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.