;
Athirady Tamil News

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி

0

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டது.

இது வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அக்னி-5 ஏவுகணை
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அக்னி1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீற்றர் முதல் 3,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லக் கூடியது.

இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.