;
Athirady Tamil News

என் கணவரின் சாவுக்கு கடற்படையும் காரணம் – படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞனின் மனைவி தெரிவிப்பு

0

எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில் , கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்துள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில் ,

காரைநகருக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பும் வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர்.

அவ்வேளை , நானும் கணவரும் அவர்களிடம் தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமிற்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள்.

” எங்களை கடத்த போறாங்க , எங்களை காப்பாற்றுங்க ” என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால் அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள்

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனர்.

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு , எமக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தால் , எனது கணவரின் உயிர் பிரிந்திருக்கது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார்.

அதேவேளை , கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது இருந்தாலும் , தமது முகாமிற்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்தி விட்டு , இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்ற போதும் கடற்படையினர் அதனை தடுக்கவோ , கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமை இருந்தமை கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.