;
Athirady Tamil News

17 வயது யுவதி படுகொலை; சந்தேக நபர் கைது

0

எல்பிட்டிய பகுதியில் 17 வயது யுவதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் இந்தமையினால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார், சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட 17 வயது யுவதி சடலம் கடந்த 9 ஆம் திகதி பொலிஸாரினால் மீட்கப்பட்டது தெரிந்ததே

You might also like

Leave A Reply

Your email address will not be published.